என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெங்களூரில் இருந்து கேரளாவுக்கு பஸ்சில் 77 பவுன் நகை கடத்திய வாலிபர் கைது
ஊட்டி:
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம், முத்தங்கா சோதனை சாவடியில் முத்தங்கா இன்ஸ்பெக்டர் முகமது சலீம், சப்-இன்ஸ்பெக்டர் மஜ்ஜூ தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பெங்களூரிலிருந்து கோழிக்கோடு நோக்கி கேரள அரசு பஸ் ஒன்று வந்தது. போலீசார் அந்த பஸ்சை மறித் சோதனை செய்தனர். அப்போது பஸ்சில் இருந்த ஒரு பயணியின் பையை சோதனையிட்டனர். அதில் 77 பவுன் தங்க நகைகள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.26 லட்சம் ஆகும். ஆனால் நகைக்கு உரிய ஆவணங்கள் ஏதும் அந்த நபரிடம் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர், ‘மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அர்ஜூன்மாலிக் (வயது25) என்பதும், இந்த நகையை பெங்களூரில் இருந்து ஆவணங்கள் இல்லாமல் கேரளாவிற்கு விற்பனைக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் அர்ஜூன்மாலிக்கை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்