search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பெங்களூரில் இருந்து கேரளாவுக்கு பஸ்சில் 77 பவுன் நகை கடத்திய வாலிபர் கைது

    பெங்களூரில் இருந்து கேரளாவுக்கு பஸ்சில் 77 பவுன் நகை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊட்டி:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டம், முத்தங்கா சோதனை சாவடியில் முத்தங்கா இன்ஸ்பெக்டர் முகமது சலீம், சப்-இன்ஸ்பெக்டர் மஜ்ஜூ தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, பெங்களூரிலிருந்து கோழிக்கோடு நோக்கி கேரள அரசு பஸ் ஒன்று வந்தது. போலீசார் அந்த பஸ்சை மறித் சோதனை செய்தனர். அப்போது பஸ்சில் இருந்த ஒரு பயணியின் பையை சோதனையிட்டனர். அதில் 77 பவுன் தங்க நகைகள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.26 லட்சம் ஆகும். ஆனால் நகைக்கு உரிய ஆவணங்கள் ஏதும் அந்த நபரிடம் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர், ‘மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அர்ஜூன்மாலிக் (வயது25) என்பதும், இந்த நகையை பெங்களூரில் இருந்து ஆவணங்கள் இல்லாமல் கேரளாவிற்கு விற்பனைக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் அர்ஜூன்மாலிக்கை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×