என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூடலூர் அருகே ஆற்றில் மூழ்கி 3 கேரள வாலிபர்கள் பலி
Byமாலை மலர்20 Dec 2019 9:50 AM GMT (Updated: 20 Dec 2019 9:50 AM GMT)
கூடலூர் அருகே ஆற்றில் மூழ்கி 3 கேரள வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஊட்டி:
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் காயங்குளம் பகுதியை சேர்ந்தவர் பிஜூலால்(வயது 20). இவர் நேற்று வயநாடு பகுதிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார்.
அதன்படி பிஜூலால் மற்றும் அதேப்பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான ஜிவின் (21), நிதின் (23) மற்றும் சிலருடன் காரில் வயநாடுக்கு சென்றார். அப்போது அவர்களது கார் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கேரளா மாநிலத்துக்கு உட்பட்ட மேப்பாடியை அடுத்த சோழமலை பொன்குன்னம் பகுதியில் அந்த பகுதியில் உள்ள ஆற்றை பார்த்தனர்.
பார்க்க ரம்மியமாக இருந்ததால் காரை நிறுத்திவிட்டு இறங்கி ஆற்றை ரசித்து கொண்டிருந்தனர்.
அப்போது பிஜூலால், ஜிவின், நிதின் ஆகியோர் ஆற்றில் இறங்கி குளிக்க விரும்பினர். இதைத் தொடர்ந்து அவர்கள் ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 3 பேரும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றனர்.
நீச்சல் தெரியாததால் அவர்கள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். இதை பார்த்து அதிர்ச்சியான அவர்களுடன் வந்தவர்கள் சத்தம் போட்டனர்.
அவர்களது சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ஆற்றில் குதித்து வாலிபர்களை தேடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மேப்பாடு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆற்றில் இறங்கி வாலிபர்களை தேடினர். இந்த நிலையில் வாலிபர்கள் குளித்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில், 3 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி மேப்பாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 வாலிபர்கள் ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் காயங்குளம் பகுதியை சேர்ந்தவர் பிஜூலால்(வயது 20). இவர் நேற்று வயநாடு பகுதிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார்.
அதன்படி பிஜூலால் மற்றும் அதேப்பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான ஜிவின் (21), நிதின் (23) மற்றும் சிலருடன் காரில் வயநாடுக்கு சென்றார். அப்போது அவர்களது கார் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கேரளா மாநிலத்துக்கு உட்பட்ட மேப்பாடியை அடுத்த சோழமலை பொன்குன்னம் பகுதியில் அந்த பகுதியில் உள்ள ஆற்றை பார்த்தனர்.
பார்க்க ரம்மியமாக இருந்ததால் காரை நிறுத்திவிட்டு இறங்கி ஆற்றை ரசித்து கொண்டிருந்தனர்.
அப்போது பிஜூலால், ஜிவின், நிதின் ஆகியோர் ஆற்றில் இறங்கி குளிக்க விரும்பினர். இதைத் தொடர்ந்து அவர்கள் ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 3 பேரும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றனர்.
நீச்சல் தெரியாததால் அவர்கள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். இதை பார்த்து அதிர்ச்சியான அவர்களுடன் வந்தவர்கள் சத்தம் போட்டனர்.
அவர்களது சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ஆற்றில் குதித்து வாலிபர்களை தேடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மேப்பாடு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆற்றில் இறங்கி வாலிபர்களை தேடினர். இந்த நிலையில் வாலிபர்கள் குளித்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில், 3 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி மேப்பாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 வாலிபர்கள் ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X