search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கோத்தகிரியில் 2 டெம்போ திருடிய சேலம் வாலிபர் கைது

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் 2 டெம்போ திருடிய சேலம் வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து டெம்போக்களை பறிமுதல் செய்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, ரைபிள் ரேஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன். இவர் சொந்தமாக டெம்போக்கள் வைத்துள்ளார். கடந்த 9-ந் தேதி தனக்கு சொந்தமான 2 டெம்போக்களை கோத்தகிரி அருகே தேனாடு பகுதியில் நிறுத்தி இருந்தார். இந்த நிலையில் மறுநாள் வந்து பார்த்தபோது 2 டெம்போக்களையும் காணவில்லை. இது குறித்து அவர் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் டெம்போக்கள் திருடியவரை பிடிக்க இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், ஜார்ஜ், சுரேந்தர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் டெம்போ திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் காணாமல் போன 2 டெம்போக்களும் சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று டெம்போக்களை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏற்காடு பகுதியை சேர்ந்த விஜி(23) என்பவர் கோத்தகிரி தேனாடு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 2 டெம்போக்களையும் திருடி இங்கு கொண்டு வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 2 டெம்போக்களையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×