என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பழுதை சரிசெய்து தண்ணீர் வழங்காவிட்டால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு
Byமாலை மலர்16 Dec 2019 6:15 PM GMT (Updated: 16 Dec 2019 6:15 PM GMT)
மின்மோட்டாரில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.
சிவகங்கை:
சிவகங்கையை அடுத்த ஒக்கூர் ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் குடிநீர் தொட்டி அரசு சார்பில் அமைக்கப்பட் டது. இதன் அருகே உயர் நிலைப்பள்ளி உள்ளதால் மாணவர்களுக்கு இந்த தொட்டி பெரிதும் பயனுள்ளதாக இருந்து வந்தது. மேலும் இப்பகுதி மக்களின் அன்றாட தேவைக்கும் இங்கிருந்து தண்ணீர் எடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக இந்த தொட்டியின் மின்மோட்டார் செயல்படாமல் பழுதடைந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இனியும் இந்த தொட்டியையும் மின்மோட்டாரையும் சீரமைக்காவிட்டால் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஒக்கூர் ஆசிரியர் குடியிருப்போர் சங்க தலைவர் கணபதி சுப்பிரமணியன் கூறியதாவது:-
இந்த பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2012-ம் ஆண்டு இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக அரசு சார்பில் ஆழ்குழாய், அடிபம்பு அமைக்கப்பட்டது. இதனால் மக்களின் அன்றாட தேவைக்கு தண்ணீர் கிைடத்து வந்தது. பின்னர் மின் மோட்டார் அமைத்து தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக மின் மோட்டார் பழுது காரணமாக தொட்டியில் தண்ணீர் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்த பழுதை நாங்களே சரிசெய்தாலும் சிறிது நாட்களிலேய மீண்டும் பழுது ஏற்படுகிறது. இது குறித்து பலமுறை புகார் செய்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இனியும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை என்றால் உள்ளட்சி தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
சிவகங்கையை அடுத்த ஒக்கூர் ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் குடிநீர் தொட்டி அரசு சார்பில் அமைக்கப்பட் டது. இதன் அருகே உயர் நிலைப்பள்ளி உள்ளதால் மாணவர்களுக்கு இந்த தொட்டி பெரிதும் பயனுள்ளதாக இருந்து வந்தது. மேலும் இப்பகுதி மக்களின் அன்றாட தேவைக்கும் இங்கிருந்து தண்ணீர் எடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக இந்த தொட்டியின் மின்மோட்டார் செயல்படாமல் பழுதடைந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இனியும் இந்த தொட்டியையும் மின்மோட்டாரையும் சீரமைக்காவிட்டால் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஒக்கூர் ஆசிரியர் குடியிருப்போர் சங்க தலைவர் கணபதி சுப்பிரமணியன் கூறியதாவது:-
இந்த பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2012-ம் ஆண்டு இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக அரசு சார்பில் ஆழ்குழாய், அடிபம்பு அமைக்கப்பட்டது. இதனால் மக்களின் அன்றாட தேவைக்கு தண்ணீர் கிைடத்து வந்தது. பின்னர் மின் மோட்டார் அமைத்து தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக மின் மோட்டார் பழுது காரணமாக தொட்டியில் தண்ணீர் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்த பழுதை நாங்களே சரிசெய்தாலும் சிறிது நாட்களிலேய மீண்டும் பழுது ஏற்படுகிறது. இது குறித்து பலமுறை புகார் செய்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இனியும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை என்றால் உள்ளட்சி தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X