என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேளாங்கண்ணி கடலில் மூழ்கி தபால் ஊழியர் பலி - சுற்றுலா வந்த போது பரிதாபம்
Byமாலை மலர்16 Dec 2019 5:52 PM GMT (Updated: 16 Dec 2019 5:52 PM GMT)
வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த போது கடலில் மூழ்கி தபால் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
வேளாங்கண்ணி:
தென்காசி மாவட்டம் அகரகட்டு ஆய்குடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மிக்கேல் அந்தோணி வியாகப்பன். இவரது மகன் மரிய அந்தோணி ஸ்டாலின் (வயது32). இவர் தென்காசி மாவட்டத்தில் உள்ள குணராமநல்லூரில் போஸ்ட் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 13-ந்தேதி மரிய அந்தோணி ஸ்டாலின் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை மரிய அந்தோணி ஸ்டாலின் கடலில் குளித்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்ததும் அருகில் இருந்த நண்பர்கள் மற்றும் பொது மக்கள் அவரை உடனடியாக மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரி சோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கீழையூர் மற்றும் வேளாங்கண்ணி கடலோர காவல்படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் அகரகட்டு ஆய்குடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மிக்கேல் அந்தோணி வியாகப்பன். இவரது மகன் மரிய அந்தோணி ஸ்டாலின் (வயது32). இவர் தென்காசி மாவட்டத்தில் உள்ள குணராமநல்லூரில் போஸ்ட் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 13-ந்தேதி மரிய அந்தோணி ஸ்டாலின் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை மரிய அந்தோணி ஸ்டாலின் கடலில் குளித்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்ததும் அருகில் இருந்த நண்பர்கள் மற்றும் பொது மக்கள் அவரை உடனடியாக மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரி சோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கீழையூர் மற்றும் வேளாங்கண்ணி கடலோர காவல்படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X