என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரைக்குடி, இளையான்குடியில் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம்
Byமாலை மலர்10 Dec 2019 6:07 PM GMT (Updated: 10 Dec 2019 6:07 PM GMT)
காரைக்குடி மற்றும் இளையான்குடியில் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
காரைக்குடி:
காரைக்குடி என்.சி.சி. 9-வது பட்டாலியன் சார்பில் என்.சி.சி. மாணவர்கள் சார்பில் கொடிநாள் விழா மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் கல்லூரி சாலையில் நடைபெற்றது. விழாவிற்கு கர்னல் அஜய்ஜோசி தலைமை தாங்கினார். ஹவில்தார் சரவணன், சுபேதார் மேஜர் ரமேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தில் என்.சி.சி. மாணவர்கள், பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு சுகாதாரம் குறித்த கோஷங்களை எழுப்பினர்.
இதேபோல் இளையான்குடி மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி. சார்பில் கொடிநாள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல் சுகாதார விழிப்புணர்வு குறித்த என்.சி.சி. மாணவர்களின் ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமைஆசிரியர் முகம்மதுஇல்யாஸ் தலைமை தாங்கி மாணவர்கள் சுகாதாரமாக இருப்பதன் அவசியம் குறித்து பேசினார். முன்னதாக பள்ளியின் என்.சி.சி. அலுவலர் சிக்கந்தர்சுலைமான் வரவேற்று பேசினார். ஆசிரியர்கள் பார்த்திபன், அப்துல் அஜீஸ் ஆகியோர் மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்த கருத்துகளை எடுத்துரைத்தனர். ஊர்வலம் இளையான்குடி கீழாயூர் காலனியில் இருந்து தொடங்கி இளையான்குடி நகரில் முக்கியமான வீதிகளில் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவு பெற்றது. ஊர்வலத்தில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை மாணவர்கள் ஏந்தி வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி என்.சி.சி. மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
காரைக்குடி என்.சி.சி. 9-வது பட்டாலியன் சார்பில் என்.சி.சி. மாணவர்கள் சார்பில் கொடிநாள் விழா மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் கல்லூரி சாலையில் நடைபெற்றது. விழாவிற்கு கர்னல் அஜய்ஜோசி தலைமை தாங்கினார். ஹவில்தார் சரவணன், சுபேதார் மேஜர் ரமேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தில் என்.சி.சி. மாணவர்கள், பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு சுகாதாரம் குறித்த கோஷங்களை எழுப்பினர்.
இதேபோல் இளையான்குடி மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி. சார்பில் கொடிநாள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல் சுகாதார விழிப்புணர்வு குறித்த என்.சி.சி. மாணவர்களின் ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமைஆசிரியர் முகம்மதுஇல்யாஸ் தலைமை தாங்கி மாணவர்கள் சுகாதாரமாக இருப்பதன் அவசியம் குறித்து பேசினார். முன்னதாக பள்ளியின் என்.சி.சி. அலுவலர் சிக்கந்தர்சுலைமான் வரவேற்று பேசினார். ஆசிரியர்கள் பார்த்திபன், அப்துல் அஜீஸ் ஆகியோர் மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்த கருத்துகளை எடுத்துரைத்தனர். ஊர்வலம் இளையான்குடி கீழாயூர் காலனியில் இருந்து தொடங்கி இளையான்குடி நகரில் முக்கியமான வீதிகளில் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவு பெற்றது. ஊர்வலத்தில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை மாணவர்கள் ஏந்தி வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி என்.சி.சி. மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X