search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை (கோப்புப்படம்)
    X
    தற்கொலை (கோப்புப்படம்)

    காஞ்சிபுரம் அருகே 7 மாத கர்ப்பிணி பெண் தற்கொலை

    காஞ்சிபுரம் அருகே நாளை வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில் 7 மாத கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த தேனம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பிரியா (23). இவர்கள் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்து கொண்டனர். தற்போது பிரியா 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    அவருக்கு நாளை வளைகாப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று காலை பிரியா திடீரென வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×