என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகையில் நகைக்கடை அதிபர் மர்ம மரணம்- போலீசார் விசாரணை
Byமாலை மலர்4 Dec 2019 1:02 PM GMT (Updated: 4 Dec 2019 1:02 PM GMT)
நாகையில் நகைக்கடை அதிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள திருப்புகலூர் மெயின் சாலையில் கொய்யாத்தோப்பு என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் காயத்துடன் இறந்து கிடப்பதாக திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையெடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் மயிலாடுதுறை ஓ.எஸ்.எம் நகரை சேர்ந்த ரிக்கப்சந்த் மகன் ஜித்தேந்திரகுமார்(வயது34) என்பதும், இவர் திருமருகல் சந்தைப் பேட்டையில் நகைக்கடை மற்றும் நகை அடகு கடை வைத்து நடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் திருமருகலில் உள்ள நகைக் கடை மற்றும் அடகு கடையை பூட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறையில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து ஜித்தேந்திரகுமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் இறந்து கிடந்த இடத்தில் அவரது கடை சாவி, பணப்பை, கழுத்தில் அணிந்திருந்த நகை ஆகிய எந்த பொட்களும் இல்லை. ஜித்தேந்திரகுமாரின் சாவில் மர்மம் இருப்பதாக, அவருடைய சித்தப்பா அஜித்குமார் திட்டச்சேரி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை யாராவது கொலை செய்தார்களா? அல்லது வாகனம் மோதி இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X