search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணம் கொள்ளை
    X
    பணம் கொள்ளை

    மார்த்தாண்டத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை

    மார்த்தாண்டத்தில் பகுதியில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளையடித்துவிட்டு தலைமறைவான கொள்ளையனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    மார்த்தாண்டம் பகுதியில் சி.எஸ்.ஐ. வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் மார்த்தாண்டம் அருகே மாராயபுரத்தை சேர்ந்த சுனில்குமார் (வயது 42) என்பவர் கம்ப்யூட்டர் கடை வைத்துள்ளார்.

    நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு சென்ற சுனில்குமார் நேற்று காலை கடைக்கு வந்தபோது கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது ரூ.85 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் லேப்-டாப்புகள் திருடப்பட்டிருந்தது. திருட்டு போன பொருட்களின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.

    இதேப்போல் தொலையா வட்டத்தைச் சேர்ந்த பென்சிகர் என்பவரது எலக்ட்ரானிக்கல் கடையிலும் கொள்ளையர்கள் பொருட்களை திருடிச் சென்றிருந்தனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். 2 கைரேகைகள் சிக்கியது. மோப்ப நாய் ஓரா வரவழைக்கப்பட்டது. கடையில் மோப்பம்பிடித்து விட்டு ஓடிய மோப்ப நாய் ஓரா யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    கடையில் கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கண்காணிப்பு கேமராவில் கொள்ளையன் ஒருவன் முகமூடி அணிந்து திருடுவது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அவர் யார்? என்ற விவரத்தை போலீசார் சேகரித்தனர். அப்போது அவர் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த வாலிபர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை தேடி அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் அவர் வீட்டில் இல்லை. போலீசார் தேடுவதை அறிந்த அந்த வாலிபர் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

    Next Story
    ×