என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஞ்சிபுரத்தில் வாலிபர் கொலை- குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது
Byமாலை மலர்24 Nov 2019 8:44 AM GMT (Updated: 24 Nov 2019 8:44 AM GMT)
காஞ்சிபுரம் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த திருப்பருத்திகுன்றம் பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன். இவர் கடந்த மாதம் பட்டப்பகலில் காஞ்சிபுரம் வணிகள் வீதியில் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக மேல்சிறுணை கிராமத்தை சேர்ந்த டேவிட், தாமல் கிராமத்தைச் சேர்ந்த துளசிராமன், சங்கரா குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த விஜய், வெங்கட்ராயன் பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கொலை வழக்கில் கைதான துளசி ராமன் உள்பட 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மாவட்ட கலெக்டர் பொன்னையாவுக்கு பரிந்துரை செய்திருந்தார்.
இதனையடுத்து 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து துளசி ராமன் உள்பட 4 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் அடுத்த திருப்பருத்திகுன்றம் பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன். இவர் கடந்த மாதம் பட்டப்பகலில் காஞ்சிபுரம் வணிகள் வீதியில் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக மேல்சிறுணை கிராமத்தை சேர்ந்த டேவிட், தாமல் கிராமத்தைச் சேர்ந்த துளசிராமன், சங்கரா குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த விஜய், வெங்கட்ராயன் பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கொலை வழக்கில் கைதான துளசி ராமன் உள்பட 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மாவட்ட கலெக்டர் பொன்னையாவுக்கு பரிந்துரை செய்திருந்தார்.
இதனையடுத்து 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து துளசி ராமன் உள்பட 4 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X