என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாணவர்கள் செல்போனை தவிர்க்க வேண்டும்- அமைச்சர் செங்கோட்டையன் அறிவுரை
Byமாலை மலர்24 Nov 2019 4:41 AM GMT (Updated: 24 Nov 2019 4:41 AM GMT)
ஒவ்வொருவரும் உலகம் போற்றும் மாணவர்களாக உருவாக வேண்டுமென்றால் செல்போனை தவிர்த்து கல்வியை கற்க வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தியுள்ளார்.
ஈரோடு:
பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலையரங்கம் திறப்பு விழா நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமை தாங்கினார்.
இதில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய திறந்தவெளி கலையரங்கத்தை திறந்து வைத்தனர்.
ஒவ்வொரு மாணவர்களும் உலகம் போற்றும் மாணவர்களாக உருவாக வேண்டும். அதற்கு நீங்கள் செல்போனை தவிர்த்து கல்வியை கற்க வேண்டும். கைபேசியை மாணவர்கள் தேவைக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் உங்களின் எதிர்காலம் உங்கள் கையில் தான் உள்ளது.
தேசத்தை பேணிக் காப்பதற்கும் பெற்றோரை காப்பதற்கும் மாணவ மாணவிகள் ஆசிரியர்களை குருவாக நேசிக்கவேண்டும். பல்வேறு திறமைகளுடன் உள்ள மாணவ மாணவிகள் நமது தமிழ்நாட்டில் தான் அதிகமாக உள்ளனர்.
நீட் தேர்வை பொருத்தவரை 413 மையங்களில் 21 ஆயிரம் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 12-ம் வகுப்பு தேர்வு முடிந்த உடனேயே அந்தந்த பகுதியில் உள்ள தேர்வு செய்யப்பட்ட கல்லூரிகளில் 15 நாட்கள் வரை உணவு தங்கும் வசதியுடன் பட்டய கணக்காளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
மேலும் பள்ளிகளில் வாரம் ஒரு முறை இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலையரங்கம் திறப்பு விழா நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமை தாங்கினார்.
இதில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய திறந்தவெளி கலையரங்கத்தை திறந்து வைத்தனர்.
விழாவில் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் கூறியதாவது:-
தேசத்தை பேணிக் காப்பதற்கும் பெற்றோரை காப்பதற்கும் மாணவ மாணவிகள் ஆசிரியர்களை குருவாக நேசிக்கவேண்டும். பல்வேறு திறமைகளுடன் உள்ள மாணவ மாணவிகள் நமது தமிழ்நாட்டில் தான் அதிகமாக உள்ளனர்.
நீட் தேர்வை பொருத்தவரை 413 மையங்களில் 21 ஆயிரம் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 12-ம் வகுப்பு தேர்வு முடிந்த உடனேயே அந்தந்த பகுதியில் உள்ள தேர்வு செய்யப்பட்ட கல்லூரிகளில் 15 நாட்கள் வரை உணவு தங்கும் வசதியுடன் பட்டய கணக்காளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
மேலும் பள்ளிகளில் வாரம் ஒரு முறை இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X