search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    ஈரோடு மாவட்ட அணை பகுதிகளில் மீண்டும் கொட்டிய கன மழை

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு மிதமான மழை முதல் பலத்த மழை பெய்தது. குறிப்பாக அணைப்பகுதியில் மழை வெளுத்து வாங்கியது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக காலை மற்றும் மதிய நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். ஆனால் ஈரோடு அணைப்பகுதிகளான வரட்டுப்பள்ளம் கொடிவேரி குண்டேரிப்பள்ளம் பவானிசாகர் பகுதிகளில் அவ்வப்போது மிதமான அளவு மழை பெய்து வந்தது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு மிதமான மழை முதல் பலத்த மழை பெய்தது. குறிப்பாக அணைப்பகுதியில் அண்ணா வரட்டுப்பள்ளம் கொடிவேரி குண்டேரிப்பள்ளம் அணை பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

    இதில் அதிகபட்சமாக கொடிவேரியில் 44.2 மீட்டர் மழை பதிவாகியது. ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பலத்த மழை பெய்ததால் மாவட்டத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் ஏரி குளங்கள் நிரம்பி வருகிறது.

    சத்தியமங்கலம், பெருந்துறை, மொடக்குறிச்சி, அம்மாபேட்டை போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    கொடிவேரி அணையில் ஏற்கனவே பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு கொடிவேரியில் பலத்த மழை பெய்ததால் அணைக்கு இருந்து நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    கொடிவேரி - 44.2

    குண்டேரிபள்ளம் - 26. 2

    வரட்டு பள்ளம் - 20.2

    ஈரோடு - 5

    கவுந்தப்பாடி - 4.2

    பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து மிதமான அளவு நீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழைப்பொழிவு குறைந்ததால் நீர்வரத்து குறைந்துள்ளது என்றாலும் பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவான 105 அடியிலேயே தொடர்ந்து இருந்து வருகிறது.

    இந்த காலை 8 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணை 105 அடியில் உள்ளது. அணைக்கு 3797 கன அடி தண்ணீர் என கணிசமான நிலையில் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு 1600 கனஅடியும் கீழ்பவானி வாய்க்காலுக்கு 2200 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது

    Next Story
    ×