என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீர்காழி அருகே பெண்ணிடம் 3½ பவுன் செயின் பறித்த 3 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்20 Nov 2019 12:29 PM GMT (Updated: 20 Nov 2019 12:29 PM GMT)
சீர்காழி அருகே பெண்ணிடம் 3½ பவுன் செயினை பறித்த சென்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் திருவாடுதுறை மடத்துத் தெருவை சேர்ந்தவர் சண்முகம் மனைவி விஜயலெட்சுமி (வயது38). இவர் கடந்த 7-ந்தேதி நள்ளான் சாவடி அருகே மொபட்டில் தன் குழந்தையுடன் சென்றபோது அவ்வழியே பைக்கில் வந்த 2 மர்மநபர்கள் விஜயலெட்சுமி அணிந்திருந்த 5 பவுன் செயினை பறிக்கமுயன்றனர்.
விஜயலெட்சுமி செயினை இருக்க பிடித்து கொண்டதில் 3½ பவுன் செயின் மட்டும் பாதியாக அறுந்ததில் அதனை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இதுகுறித்து விஜயலெட்சுமி வைத்தீஸ்வரன் கோவில் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சீர்காழி பைபாஸ் சாலை பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த சீர்காழி ராதாநல்லூர் பெரியார் தெரு குற்றாலீஸ்வரன் (21), சீர்காழி கச்சேரி ரோடு வீராசாமி மகன் விக்னேஷ் (21), சீர்காழி ராதாநல்லூர் கோவில் தெரு ராமமூர்த்தி மகன் கருணாமூர்த்தி(22) ஆகிய 3 பேரிடம் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர்.
இதில் 3 பேரும் விஜயலெட்சுமியிடம் செயினை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் திருவாடுதுறை மடத்துத் தெருவை சேர்ந்தவர் சண்முகம் மனைவி விஜயலெட்சுமி (வயது38). இவர் கடந்த 7-ந்தேதி நள்ளான் சாவடி அருகே மொபட்டில் தன் குழந்தையுடன் சென்றபோது அவ்வழியே பைக்கில் வந்த 2 மர்மநபர்கள் விஜயலெட்சுமி அணிந்திருந்த 5 பவுன் செயினை பறிக்கமுயன்றனர்.
விஜயலெட்சுமி செயினை இருக்க பிடித்து கொண்டதில் 3½ பவுன் செயின் மட்டும் பாதியாக அறுந்ததில் அதனை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இதுகுறித்து விஜயலெட்சுமி வைத்தீஸ்வரன் கோவில் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சீர்காழி பைபாஸ் சாலை பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த சீர்காழி ராதாநல்லூர் பெரியார் தெரு குற்றாலீஸ்வரன் (21), சீர்காழி கச்சேரி ரோடு வீராசாமி மகன் விக்னேஷ் (21), சீர்காழி ராதாநல்லூர் கோவில் தெரு ராமமூர்த்தி மகன் கருணாமூர்த்தி(22) ஆகிய 3 பேரிடம் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர்.
இதில் 3 பேரும் விஜயலெட்சுமியிடம் செயினை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X