search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    ஓச்சேரி அருகே விபத்து- கணவருடன் பைக்கில் சென்ற சென்னை பெண் பலி

    ஓச்சேரி அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சென்னை பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஆற்காடு:

    சென்னை திருவேற்காடு கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு வியாபாரி. இவரது மனைவி சித்ரா (வயது 42). கணவன் மனைவி இருவரும் வேலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக இன்று காலை பைக்கில் வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    ஓச்சேரி அடுத்த சித்தஞ்சி கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது இவர்கள் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    இதில் தூக்கி வீசப்பட்ட தம்பதி இருவரும் படுகாயமடைந்தனர். தலையில் பலத்த காயம் அடைந்த சித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த சேட்டுவை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் சித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×