என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குன்னூர் அருகே 30 பவுன் நகை திருடிய வாலிபர் கைது
Byமாலை மலர்9 Nov 2019 10:13 AM GMT (Updated: 9 Nov 2019 10:13 AM GMT)
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே 30 பவுன் நகை திருடிய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து நகை பறிமுல் செய்யப்பட்டது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பெட்டட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாசி. விவசாயி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது வீட்டை பூட்டி வெளியில் சென்றுவிட்டார்.
மாலையில் வீட்டிற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியான அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் பீரோவில் இருந்த 30 பவுன் நகையை காணவில்லை. இதுகுறித்து மாசி அருவங்காடு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் அவர்களை வலைவீசி தேடி வந்தனர். நேற்று குன்னூர் குற்றப்பிரிவு போலீசார் பெட்டட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்தார். இதை பார்த்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.
குற்றப்பிரிவு போலீசார் அவரை அருவங்காடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பெட்டட்டி பகுதியை சேர்ந்த குமார் என்பதும், இவர் தான் விவசாயி வீட்டில் 30 பவுன் நகை திருடியதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து குன்னூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்த 30 பவுன் நகையையும் பறிமுதல் செய்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பெட்டட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாசி. விவசாயி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது வீட்டை பூட்டி வெளியில் சென்றுவிட்டார்.
மாலையில் வீட்டிற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியான அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் பீரோவில் இருந்த 30 பவுன் நகையை காணவில்லை. இதுகுறித்து மாசி அருவங்காடு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் அவர்களை வலைவீசி தேடி வந்தனர். நேற்று குன்னூர் குற்றப்பிரிவு போலீசார் பெட்டட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்தார். இதை பார்த்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.
குற்றப்பிரிவு போலீசார் அவரை அருவங்காடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பெட்டட்டி பகுதியை சேர்ந்த குமார் என்பதும், இவர் தான் விவசாயி வீட்டில் 30 பவுன் நகை திருடியதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து குன்னூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்த 30 பவுன் நகையையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X