search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து செல்லும் மாட்டு வண்டிகளை படத்தில் காணலாம்.
    X
    வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து செல்லும் மாட்டு வண்டிகளை படத்தில் காணலாம்.

    கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்

    சிங்கம்புணரியில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி கிராம மக்கள் சார்பில் 4-வது ஆண்டு கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் சிங்கம்புணரி அருகே உள்ள எஸ்.எஸ். பள்ளிவாசலில் தொடங்கி மருதிபட்டி வரை உள்ள 8 மைல் தூரத்திற்கு பெரிய மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

    இதேபோல கிழக்கிப்பட்டி வரை 6 மைல் பந்தய தூரமாக நிர்ணயிக்கப்பட்டு சின்ன மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. போட்டியில் பெரிய மாட்டு வண்டி பிரிவில் 13 வண்டிகளும் சின்ன மாட்டு வண்டி பிரிவில் 16 வண்டிகளும் கலந்து கொண்டன.

    இதில் பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை சொக்கநாதபுரம் பாலு வண்டியும், 2-வது பரிசாக நொண்டி கோவில்பட்டி விய்வ மித்ரா வண்டியும், 3-வது பரிசை கொட்டகுடி பால்ச்சாமி வண்டியும், 4-வது பரிசு சிங்கம்புணரி மதிசூடியன் வண்டியும் பெற்றன.

    சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை சிங்கம்புணரி மதிசூடியன் வண்டியும், 2-வது பரிசு புலிமங்களப்பட்டி முனிச்சாமி வண்டியும், 3-வது பரிசு செம்மினிப்பட்டி பவுன்ராஜ் வண்டியும், 4-வது பரிசு குப்பச்சிப்பட்டி சந்திரன் அன்புகரசு வண்டியும் பெற்றன. பந்தயத்தில் கலந்து கொண்ட அனைத்து வண்டிகளுக்கும் கிராமத்தினர் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. ஏற்பாடுகளை சிங்கம்புணரி கார்த்திகை தீப திருநாள் விழாக்குழுவினர், கிராமத்தினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×