search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மாற்றுத்திறனாளி பெண்ணை வீட்டில் அடைத்து பாலியல் தொல்லை- பள்ளி மாணவன் கைது

    மயிலாடுதுறை அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை வீட்டில் அடைத்து பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி மாணவனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாற்றுத்திறனாளி பெண். அதே தெருவை சேர்ந்தவர் 9-ம் வகுப்பு மாணவர். இவர் குத்தாலம் பகுதி பள்ளியில் படித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மாலை முதல் 17 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை காணாததால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர் அப்பகுதி முழுவதும் தேடிவந்தனர். அப்போது அந்த மாணவனின் வீட்டில் மாற்றுத்திறனாளி பெண் இருப்பது தெரியவந்தது. அந்த பெண்ணை மாணவன் வலுக்கட்டாயமாக அழைத்து சென்று வெளியில் விடாமல் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் வேலுதேவி வழக்குப்பதிவு செய்து மாற்றுத்திறனாளி பெண்ணை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    அதில் அவர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அந்த 9-ம் வகுப்பு மாணவனை கைது செய்தனர்.

    மாணவருக்கு 18 வயது நிரம்பாததால் அவனை தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×