search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    பெருந்துறையில் கார் மோதி மூதாட்டி பலி

    பெருந்துறை பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள மார்க்கெட்டிற்கு காய்கறி வாங்க சென்ற மூதாட்டி கார் மோதி பலியான சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    பெருந்துறை:

    பெருந்துறை, குன்னத்தூர்ரோடு, பகுதியை சேர்ந்த வெங்கட்டராமன் என்பவரது மனைவி பத்மாவதி(63). தினமும் பெருந்துறை பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள தினசரி மார்க்கெட்டில் காய்கறி வாங்க செல்வது வழக்கம்.

    சம்பவத்தன்றும் காலை வழக்கம் போல் மார்க்கெட்டிற்கு சென்ற இவர் அங்கு ரோட்டை கடந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட பத்மாவதி தலையில் பலத்த அடிபட்ட நிலையில் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார். இது தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் மோதிச்சென்ற காரினை அடையாளம் கண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×