என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வாணியம்பாடி பகுதியில் ஆந்திரவுக்கு கடத்திய 8 டன் ரேசன் அரிசி பறிமுதல்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வாணியம்பாடி அருகே வெலதிகாமணிபெண்டா, அண்ணாநகர், தும்பேரி ஆகிய பகுதிகளிலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக வந்த தொடர்புகாரின் பேரில், அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலர், பறக்கும் படை தனி தாசில்தார், குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு கடத்தப்பட்ட பொது விநியோக திட்ட அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர்.
கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் முடிய பகுதியில் வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் பறக்கும் படை தாசில்தார் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10 வாகனங்களுடன் 4541 கிலோ ரேசன் அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது. மற்றும் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு காவல்துறையினரால் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 12 வாகனங்களுடன் 3470 கிலோ அரிசி கைப்பற்றப்பட்டும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாணியம்பாடி வெலதிகாமணிபெண்டா, அண்ணாநகர், தும்பேரி ஆகிய பகுதிகளில் அரிசி கடத்தலை முற்றிலும் தடுக்கும் பொருட்டு கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர், அனைத்து அலுவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு தொடர்ந்து இப்பணியினை கண்காணித்திட அறிவுரை வழங்கியுள்ளார்.
மேலும் அனைத்து அலுவலர்களும் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு பகலாக வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலர், பறக்கும் படை தாசில்தார் மேலும், கலெக்டர் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்து குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்திட குடிமை பொருள் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
எனவே சட்ட விரோதமாக பொது விநியோக திட்ட பொருட்களை கடத்துபவர்கள் உதவும் வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்