என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செந்துறை அருகே கோவில் பூட்டை உடைத்து கொள்ளை
Byமாலை மலர்22 Oct 2019 4:27 PM GMT (Updated: 22 Oct 2019 4:27 PM GMT)
செந்துறை அருகே ஆயிமுத்தாயி அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
ஆர்.எஸ்.மாத்தூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இலங்கைச்சேரி கிராமத்தில் ஆயிமுத்தாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினந்தோறும் காலை மாலை பூஜை நடைபெறுவது வழக்கம். நேற்று வழக்கம் போல் பூஜை முடிந்து பூசாரி முருகேசன் (வயது45) கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார்.
மறுநாள் கோவிலை திறக்க வந்துள்ளார். அப்போது கோவிலின் பூட்டு உடைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த தாம்பூலம், பித்தளையில்லான மணி, விளக்கு, கோவில் கேட்டில் உள்ள பூட்டு உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது.
இது குறித்து போலீசில் புகார் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோவிலுக்குள் புகுந்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X