என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகிரியில் தேங்காய் கடையில் திருடிய வாலிபர்கள் கைது
Byமாலை மலர்22 Oct 2019 4:13 PM GMT (Updated: 22 Oct 2019 4:13 PM GMT)
சிவகிரியில் தேங்காய் கடையில் பூட்டை உடைத்து பொருட்களை திருடி சென்ற வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சிவகிரி
சிவகிரி அருகே உள்ள சிவலிங்கபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் மணிகண்டன்(வயது 25). இவரும் அதே பகுதியை சேர்ந்த தங்கம் மகன் தங்கமணி (25) என்பவரும் நண்பர்கள்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் கடந்த 20-ந்தேதி இரவு சிவகிரி மேலரதவீதியில் உள்ள முனியாண்டி என்பவரின் தேங்காய் கடையில் பூட்டை உடைத்து அங்கு இருந்த பணம், தேங்காய் மற்றும் சில பொருட்களை திருடிவிட்டு அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சங்கரன்கோவில் இன்ஸ் பெக்டர் சுரேஷ்குமார் சந்தேகத்திற்கிடமாக நின்ற இருவரையும் அழைத்து விசாரித்தார்.
விசாரணையில் இருவரும் முன்னுக்குப்பின் முரனாக பதில் கூறியதால் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து விசாரித்ததில் இருவரும் தேங்காய் கடையில் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டன் மற்றும் தங்கமணியை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி இருவரையும் சங்கரன்கோவில் கிளை சிறைச்சாலையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X