என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்- வேலூர் கோர்ட்டு தீர்ப்பு
Byமாலை மலர்21 Oct 2019 10:58 AM GMT (Updated: 21 Oct 2019 10:58 AM GMT)
காட்பாடி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
வேலூர்:
காட்பாடி அடுத்த சேவூர் ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 25). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2015-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 6வயது சிறுமியை மிட்டாய் வாங்கி தருவதாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுபற்றி சிறுமியின் பெற்றோர் காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கு வேலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. மகளிர் கோர்ட்டு நீதிபதி செல்வம் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கினார். அதில் விஜயகுமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1,500 அபராதம் விதித்தார். இதனையடுத்து விஜயகுமார் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X