என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடகிழக்கு பருவமழை தொடங்கியது - மின்நிலையங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
Byமாலை மலர்21 Oct 2019 10:09 AM GMT (Updated: 21 Oct 2019 10:09 AM GMT)
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் மின்நிலையங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ், 12 மின் நிலையம், 13 அணை மற்றும் 30க்கு மேற்பட்ட தடுப்பணைகள் உள்ளன.
கெத்தை, அவலாஞ்சி, காட்டுகுப்பை, பைக்காரா, மாயார், மசினகுடி உள்ளிட்ட பெரும்பாலான மின் நிலையங்கள் அடர்ந்த வனப்பகுதிக்கு இடையே சரிவான பகுதியில் அமைந்துள்ளன. இங்குள்ள மின்நிலையங்கள் அமைக்கப்பட்டு, 70 ஆண்டுகள் கடந்து விட்டன.
கடந்த ஆகஸ்டு மாதம் இரண்டு வாரம் பெய்த கன மழையில் அவலாஞ்சி, அப்பர்பவானி உட்பட மின் நிலையங்களில் தண்ணீர் புகுந்தது. மின் சாதன கருவிகள், ராட்சத குழாய் செல்லும் பாதைகள் சேதமானதால் ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டது.
தற்போது, வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. மின் நிலையம், அணை மற்றும் இரவு நேரங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதை தொடர்ந்து, சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மின்வாரிய அதிகாரிகளின் கூட்டம் நடத்தப்பட்டு, நீலகிரி மாவட்ட மின் நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
குந்தா மேற்பார்வை செயற்பொறியாளர் ரவி கூறுகையில், ஆகஸ்ட் மாதம் பெய்த கன மழையில், 20 கோடி ரூபாய் வரை, நீலகிரி மின் நிலையங்களில் நஷ்டம் ஏற்பட்டது. வட கிழக்கு பருவமழை துவங்கியிருப்பதால், மீண்டும் பாதிப்பு ஏற்பட்டு நஷ்டம் ஏற்பட கூடாது.’’ இதற்கு தேவையான முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ள ஆலோசனைகள் உயர் அதிகாரிகள் தரப்பில் வழங்கப்பட்டன. இதை தொடர்ந்து, நீலகிரியிலும், மின் வாரிய முக்கிய அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடத்தப்பட்டு, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது,’’ என்றார்.
நீலகிரி மாவட்டத்தில் குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ், 12 மின் நிலையம், 13 அணை மற்றும் 30க்கு மேற்பட்ட தடுப்பணைகள் உள்ளன.
கெத்தை, அவலாஞ்சி, காட்டுகுப்பை, பைக்காரா, மாயார், மசினகுடி உள்ளிட்ட பெரும்பாலான மின் நிலையங்கள் அடர்ந்த வனப்பகுதிக்கு இடையே சரிவான பகுதியில் அமைந்துள்ளன. இங்குள்ள மின்நிலையங்கள் அமைக்கப்பட்டு, 70 ஆண்டுகள் கடந்து விட்டன.
கடந்த ஆகஸ்டு மாதம் இரண்டு வாரம் பெய்த கன மழையில் அவலாஞ்சி, அப்பர்பவானி உட்பட மின் நிலையங்களில் தண்ணீர் புகுந்தது. மின் சாதன கருவிகள், ராட்சத குழாய் செல்லும் பாதைகள் சேதமானதால் ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டது.
தற்போது, வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. மின் நிலையம், அணை மற்றும் இரவு நேரங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதை தொடர்ந்து, சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மின்வாரிய அதிகாரிகளின் கூட்டம் நடத்தப்பட்டு, நீலகிரி மாவட்ட மின் நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
குந்தா மேற்பார்வை செயற்பொறியாளர் ரவி கூறுகையில், ஆகஸ்ட் மாதம் பெய்த கன மழையில், 20 கோடி ரூபாய் வரை, நீலகிரி மின் நிலையங்களில் நஷ்டம் ஏற்பட்டது. வட கிழக்கு பருவமழை துவங்கியிருப்பதால், மீண்டும் பாதிப்பு ஏற்பட்டு நஷ்டம் ஏற்பட கூடாது.’’ இதற்கு தேவையான முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ள ஆலோசனைகள் உயர் அதிகாரிகள் தரப்பில் வழங்கப்பட்டன. இதை தொடர்ந்து, நீலகிரியிலும், மின் வாரிய முக்கிய அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடத்தப்பட்டு, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது,’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X