search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    சுங்குவார்சத்திரம் அருகே சென்னை வாலிபர் மயங்கி விழுந்து மரணம்

    சுங்குவார்சத்திரம் அருகே வேலை தேடி வந்த போது சென்னை வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    சென்னை கொளத்தூர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார்.(வயது 27). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து உள்ளார்.

    இவர் பல இடங்களில் வேலை தேடி வந்தார். ஆனால் வேலை கிடைக்கவில்லை. இதனால் இவருக்கும் குடும்பத்தாருக்கும் பிரச்சனை ஏற்பட்டு வந்தது.

    நேற்று முன்தினம் தினேஷ் வீட்டில் இருந்து கிளம்பி காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் பகுதியில் வேலைதேடி வந்தார். காலை உணவு எதுவும் சாப்பிடாமல் வந்ததாக தெரிகிறது.

    சுங்குவார்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே தினேஷ் மயங்கி கீழே விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் தினேசை மீட்டு ஆன்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரில் சேர்த்தனர்.

    பின்னர் தினேஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்கு பதிவு செய்து தினேஷ் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தாரா? அல்லது வேறு காரணமா? அல்லது வி‌ஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு செய்து கொண்டாரா? என போலீசார் பல கோணங்களில் விசாரணை செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×