search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    செந்துறை அருகே விவசாயி தற்கொலை

    செந்துறை அருகே ஆடு மேய்க்க சென்ற விவசாயி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இருங்களாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 49). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். விவசாயியான இவர் அந்த பகுதியிலுள்ள மடத்தேரி என்ற இடத்தில் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். 

    அன்று மாலை ஆடுகள் மட்டும் வீட்டிற்கு தனியாக வந்துள்ளது. இதனை கண்ட உறவினர்கள் ஆடு மேய்க்க சென்ற மாரிமுத்து வராததால் அவர் ஆடு மேய்த்த பகுதிக்கு சென்று தேடி பார்த்தனர். அப்போது மாரிமுத்து மடத்தேரியில் உள்ள வன்னி மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் குவாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற குவாகம் இன்ஸ் பெக்டர் ரவிச்சந்திரன், மாரிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மாரிமுத்து மனைவி சுமதி கொடுத்த புகாரின் பேரில் குவாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×