என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செந்துறை அருகே விவசாயி தற்கொலை
Byமாலை மலர்17 Oct 2019 2:44 PM GMT (Updated: 17 Oct 2019 2:44 PM GMT)
செந்துறை அருகே ஆடு மேய்க்க சென்ற விவசாயி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இருங்களாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 49). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். விவசாயியான இவர் அந்த பகுதியிலுள்ள மடத்தேரி என்ற இடத்தில் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
அன்று மாலை ஆடுகள் மட்டும் வீட்டிற்கு தனியாக வந்துள்ளது. இதனை கண்ட உறவினர்கள் ஆடு மேய்க்க சென்ற மாரிமுத்து வராததால் அவர் ஆடு மேய்த்த பகுதிக்கு சென்று தேடி பார்த்தனர். அப்போது மாரிமுத்து மடத்தேரியில் உள்ள வன்னி மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் குவாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற குவாகம் இன்ஸ் பெக்டர் ரவிச்சந்திரன், மாரிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மாரிமுத்து மனைவி சுமதி கொடுத்த புகாரின் பேரில் குவாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X