என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓடும் ரெயிலில் நெல்லை வியாபாரி மனைவி திடீர் மரணம் - கணவர் பிள்ளைகள் முன்பு உயிர் பிரிந்த பரிதாபம்
Byமாலை மலர்17 Oct 2019 10:52 AM GMT (Updated: 17 Oct 2019 10:52 AM GMT)
அரக்கோணத்தில் ஓடும் ரெயிலில் கணவர் பிள்ளைகள் கண் முன்பு பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரக்கோணம்:
அரக்கோணம் வந்த மும்பை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நெல்லை வியாபாரி மனைவி திடீரென இறந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டை சேர்ந்தவர் ராஜா (வயது 52). கடந்த சில வருடங்களுக்கு முன்பு மும்பைக்குச் சென்று வியாபாரத்தில் ஈடுபட்டார். அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
தீபாவளி பண்டிகைக்காக ராஜா அவரது மனைவி அருணா (வயது 49), மற்றும் அவரது மருமகள் ஆகியோருடன் மும்பையில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டு வந்தனர். ஏ.சி. முன்பதிவு பெட்டியில் அவர்கள் பயணம் செய்தனர்.
நேற்று இரவு வேலூர் மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே வந்த போது அருணாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்தார். இதனைக்கண்ட அவரது கணவர் மற்றும் மகன் மகள் ஆகியோர் கதறி அழுதனர்.
ரெயில் அரக்கோணம் வந்ததும் அங்குள்ள டாக்டர் அருணாவை பரிசோதித்தார். அப்போது அவர் இறந்தது உறுதியானது.இதனையடுத்து ரெயில்வே போலீசார் உடலை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர், பிள்ளைகள் முன்பு பெண் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரக்கோணம் வந்த மும்பை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நெல்லை வியாபாரி மனைவி திடீரென இறந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டை சேர்ந்தவர் ராஜா (வயது 52). கடந்த சில வருடங்களுக்கு முன்பு மும்பைக்குச் சென்று வியாபாரத்தில் ஈடுபட்டார். அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
தீபாவளி பண்டிகைக்காக ராஜா அவரது மனைவி அருணா (வயது 49), மற்றும் அவரது மருமகள் ஆகியோருடன் மும்பையில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டு வந்தனர். ஏ.சி. முன்பதிவு பெட்டியில் அவர்கள் பயணம் செய்தனர்.
நேற்று இரவு வேலூர் மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே வந்த போது அருணாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்தார். இதனைக்கண்ட அவரது கணவர் மற்றும் மகன் மகள் ஆகியோர் கதறி அழுதனர்.
ரெயில் அரக்கோணம் வந்ததும் அங்குள்ள டாக்டர் அருணாவை பரிசோதித்தார். அப்போது அவர் இறந்தது உறுதியானது.இதனையடுத்து ரெயில்வே போலீசார் உடலை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர், பிள்ளைகள் முன்பு பெண் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X