search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆபத்தாரணப்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    ஆபத்தாரணப்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்ற போது எடுத்த படம்.

    சிங்கம்புணரி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

    சிங்கம்புணரி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி அருகே ஆபத்தாரணப்பட்டி ஊராட்சியில் மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் இளம்பெண்கள் பாசறை சார்பில் கட்சியின் ஆண்டு விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. விழா இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ஆபத்தாரணப்பட்டி பிரபு தலைமையில் நடைபெற்றது. விழாவையொட்டி காலை 8 மணிக்கு வடமாடு மஞ்சுவிரட்டு தொடங்கியது. இதில் 16 மாடுபிடி வீரர்கள் குழுவினர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகள் கொண்டு வரப்பட்டன. மாலை 5 மணி வரை நடைபெற்ற விழாவில் ஒரு சில மாடுகள் பிடிபட்டன. பல மாடுகள் பிடிபடாமல் சென்று, உரிமையாளருக்கு பரிசுகளை வாங்கி தந்தன.

    மாடுகளை பிடித்த வீரர்களுக்கும், சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆவின் தலைவர் அசோகன், அவை தலைவர் நாகராஜன், ஓட்டுனர் அணி செயலாளர் சிவாஜி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோபி, சிங்கம்புணரி ஒன்றிய செயலாளர் வாசு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் திருவாசகம், பொதுக்குழு உறுப்பினர் சிதம்பரம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அணி ராஜசேகரன், முன்னாள் சிங்கம்புணரி பேரூராட்சி சேர்மன் லட்சுமிபிரியா ஜெயந்தன் மற்றும் காளாப்பூர் சசிகுமார் மற்றும் கட்சி தொண்டர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் திவ்யா பிரபு நன்றி கூறினார். வடமாடு மஞ்சுவிரட்டு விழா ஏற்பாடுகளை மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளரும், ஏரியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவருமான ஆபத்தாரணப்பட்டி பிரபு மற்றும் திவ்யா பிரபு செய்திருந்தனர்.
    Next Story
    ×