search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின் தடை
    X
    மின் தடை

    கடலூர், நெல்லிக்குப்பம், ரெட்டிச்சாவடி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

    கடலூர் துணை மின்நிலையம் மற்றும் நல்லாத்தூர் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர மற்றும் சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்சாரம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கடலூர்:

    கடலூர் நத்தப்பட்டு துணை மின்நிலையம் மற்றும் நல்லாத்தூர் துணை மின்நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை)மாதாந்திர மற்றும் சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக கடலூர் புதுநகர், பாரதிசாலை, செம்மண்டலம், கோண்டூர், சாவடி, நெல்லிக்குப்பம், நத்தப்பட்டு, குமராபுரம், கங்கணாங்குப்பம், வரக்கால்பட்டு, ராமாபுரம், பில்லாலி, அழகியநத்தம், திருவந்திபுரம், எஸ்.புதூர், அருங்குணம், நத்தம், திருமாணிக்குழி, சுந்தரவாண்டி, பெத்தாங்குப்பம், களையூர், இரண்டாயிரம் விளாகம், திருப்பணாம்பாக்கம், எம்.பி.அகரம் மற்றும்

    அதை சுற்றியுள்ள பகுதிகளிலும், நல்லாத்தூர், செல்லஞ்சேரி, கீழ்குமாரமங்கலம், நல்லவாடு, காட்டுப்பாளையம், ராசாப்பாளையம், புதுபூஞ்சோலைகுப்பம், தென்னம்பாக்கம், சந்திக்குப்பம், ரெட்டிச்சாவடி, காரணப்பட்டு, புதுக்கடை, குட்டியாங்குப்பம், மதலப்பட்டு, இருசாம்பாளையம், கிளிஞ்சிக்குப்பம், புதுக்குப்பம், தூக்கணாம்பாக்கம், சிங்கிரிகுடி ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். மேற்கண்ட தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயற்பொறியாளர்கள் நெல்லிக்குப்பம் லீனா, கடலூர் ராமலிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×