என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாடியில் இருந்து குதித்து விடுதி உரிமையாளர் தற்கொலை
Byமாலை மலர்12 Oct 2019 10:18 AM GMT (Updated: 12 Oct 2019 10:18 AM GMT)
ஈரோடு அருகே மாடியில் இருந்து குதித்து விடுதி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கோட்டை பழனிமலை கவுண்டர் வீதியை சேர்ந்தவர் குணசேகர் (வயது56). இவரது மனைவி சந்திரிக்கா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
குணசேகருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இவர்கள் 3 பேருக்கும் சொந்தமான விடுதி ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள மேட்டூர் ரோட்டில் உள்ளது.
குணசேகர் எப்பவும் நடைபயிற்சி செல்வது வழக்கம். ஆனால் நேற்று நடைபயிற்சி செல்லாமல் நேராக விடுதிக்கு வந்து உள்ளார். விடுதியில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று பார்வையிட்டு பின்னர் மூன்றாவது மாடியிலிருந்து மொட்டை மாடிக்கு சென்ற குணசேகர் திடீரென அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். குணசேகர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை.
இந்நிலையில் குணசேகர் மொட்டை மாடிக்கு செல்வதும் தொடர்ந்து இரு முறை மொட்டை மாடியில் உள்ள சுவற்றில் ஏறி கீழே குதிக்க முயல்வதும் பின்னர் கீழே இறங்கி வருவதும் பின்னர் மீண்டும் மூன்றாவது முறையாக மொட்டை மாடி சுவற்றில் ஏறி தலைகீழாக குதிப்பதும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த காட்சியை பார்ப்பதற்கு பதபதைக்கும் வகையில் உள்ளது.
இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு கோட்டை பழனிமலை கவுண்டர் வீதியை சேர்ந்தவர் குணசேகர் (வயது56). இவரது மனைவி சந்திரிக்கா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
குணசேகருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இவர்கள் 3 பேருக்கும் சொந்தமான விடுதி ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள மேட்டூர் ரோட்டில் உள்ளது.
குணசேகர் எப்பவும் நடைபயிற்சி செல்வது வழக்கம். ஆனால் நேற்று நடைபயிற்சி செல்லாமல் நேராக விடுதிக்கு வந்து உள்ளார். விடுதியில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று பார்வையிட்டு பின்னர் மூன்றாவது மாடியிலிருந்து மொட்டை மாடிக்கு சென்ற குணசேகர் திடீரென அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். குணசேகர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை.
இந்நிலையில் குணசேகர் மொட்டை மாடிக்கு செல்வதும் தொடர்ந்து இரு முறை மொட்டை மாடியில் உள்ள சுவற்றில் ஏறி கீழே குதிக்க முயல்வதும் பின்னர் கீழே இறங்கி வருவதும் பின்னர் மீண்டும் மூன்றாவது முறையாக மொட்டை மாடி சுவற்றில் ஏறி தலைகீழாக குதிப்பதும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த காட்சியை பார்ப்பதற்கு பதபதைக்கும் வகையில் உள்ளது.
இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X