என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சித்தோடு அருகே வாய்க்காலில் மூழ்கி பனியன் கம்பெனி டெய்லர் பலி
Byமாலை மலர்10 Oct 2019 10:20 AM GMT (Updated: 10 Oct 2019 11:27 AM GMT)
சித்தோடு அருகிலுள்ள நசியனூர் பெரிய வாய்க்காலில் மூழ்கி திருப்பூரைச் சேர்ந்த பனியன் கம்பெனி டெய்லர் பலியானார்.
சித்தோடு:
திருப்பூர், குமரானந்தபுரம் பகுதியில் வசிப்பவர் ஷேக்மொய்தீன் (வயது 28) இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் டெய்லராக பணியாற்றி வந்தார்.
கடந்த 7-ம் தேதி சேலம் மாவட்டம், சங்ககிரியில் உள்ள முனியப்பன் கோவிலில் சாமி கும்பிட்டு வருவதாக குடும்பத்தாரிடம் கூறிவிட்டு நண்பர்கள் 6 பேருடன் காரில் புறப்பட்டு திருப்பூரில் இருந்து சங்ககிரி சென்று கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது ஈரோடு அடுத்த நசியனூர் பெரிய வாய்க்காலில் குளிக்க நண்பர்களுடன் ஷேக்மொய்தீன் இறங்கியுள்ளார். இந்நிலையில் ஷேக்மொய்தீன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதனை தொடர்ந்து நேற்று காலை 9 மணியளவில் பெரிய வாய்க்கால் ராசாங்காடு அருகில் ஆண் பிரேதம் ஒன்று மிதப்பதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடம் சென்ற போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் 7-ம் தேதி நண்பர்களுடன் குளிக்க வந்த ஷேக் மொய்தீன் என்பது அவரின் தாய் மூலமாக அடையாளம் கண்டு உறுதி செய்யப்பட்டது. இச் சம்பவம் தொடர்பாக தாய் ஹனிபா கொடுத்த புகாரின் அடிப்படையில் சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர், குமரானந்தபுரம் பகுதியில் வசிப்பவர் ஷேக்மொய்தீன் (வயது 28) இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் டெய்லராக பணியாற்றி வந்தார்.
கடந்த 7-ம் தேதி சேலம் மாவட்டம், சங்ககிரியில் உள்ள முனியப்பன் கோவிலில் சாமி கும்பிட்டு வருவதாக குடும்பத்தாரிடம் கூறிவிட்டு நண்பர்கள் 6 பேருடன் காரில் புறப்பட்டு திருப்பூரில் இருந்து சங்ககிரி சென்று கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது ஈரோடு அடுத்த நசியனூர் பெரிய வாய்க்காலில் குளிக்க நண்பர்களுடன் ஷேக்மொய்தீன் இறங்கியுள்ளார். இந்நிலையில் ஷேக்மொய்தீன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதனை தொடர்ந்து நேற்று காலை 9 மணியளவில் பெரிய வாய்க்கால் ராசாங்காடு அருகில் ஆண் பிரேதம் ஒன்று மிதப்பதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடம் சென்ற போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் 7-ம் தேதி நண்பர்களுடன் குளிக்க வந்த ஷேக் மொய்தீன் என்பது அவரின் தாய் மூலமாக அடையாளம் கண்டு உறுதி செய்யப்பட்டது. இச் சம்பவம் தொடர்பாக தாய் ஹனிபா கொடுத்த புகாரின் அடிப்படையில் சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X