search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    ராணிப்பேட்டையில் மின் கம்பத்தில் கார் மோதி டிரைவர் பலி

    ராணிப்பேட்டையில் மின் கம்பத்தில் கார் மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை காரை காட்டன் பஜாரை சேர்ந்த பழனி மகன் சுரேஷ் (வயது30), பஸ் டிரைவர். இவரது நண்பர்கள் மோகன் (30), நவல்பூர் சாய்கிருஷ்ணா (30), வானாம்பாடியை சேர்ந்த பாண்டியன் (29). நண்பர்களான 4 பேரில் சாய் கிருஷ்ணா, பாண்டியன் 2 பேரும் கார் டிரைவர்களாக உள்ளனர்.

    4 பேரும் ஓட்டலில் சாப்பிடுவதற்காக பாண்டியனின் சித்தப்பா மகன் காரை எடுத்து கொண்டு சென்றனர்.

    ராணிப்பேட்டை எம்.பி.டி. ரோட்டில் உள்ள பேக்கரியில் திண்பண்டங்களை வாங்கி கொண்டு மீண்டும் காரில் ராணிப்பேட்டைக்கு புறப்பட்டனர். காரை சாய் கிருஷ்ணா ஓட்டினார். ராணிப்பேட்டை அவுசிங் போர்டு அருகே வந்தபோது சாலையின் நடுவில் இருந்த பேரிகார்டு மீது கார் மோதியது.

    இதில் நிலை கவிழ்ந்த கார் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். சாய் கிருஷ்ணா படுகாயம் அடைந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வாலாஜா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த சாய்கிருஷ்ணாவை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து வாலாஜா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×