search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    சிவகங்கையில் என்ஜினீயர் எரித்துக்கொலை? - போலீசார் தீவிர விசாரணை

    வீட்டில் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்த என்ஜினீயர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை சாத்தப்பர் தெருவைச் சேர்ந்தவர் அரவிந்த் (வயது 35). ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரான இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரி (30) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    கடந்த சில மாதங்களாக அரவிந்த் சரியாக வேலைக்கு செல்லவில்லை. மேலும் கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாலையில் நவராத்திரி விழாவையொட்டி காளீஸ்வரி அருகில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். இரவில் அவர் வீட்டுக்கு திரும்பினார்.

    அப்போது வீட்டின் அறையில் அரவிந்தன் உடல் முழுவதும் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து காளீஸ்வரி கூக் குரலிட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அரவிந்த் குடும்ப பிரச்சினையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மர்ம நபர்களால் எரித்துக் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    Next Story
    ×