search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழப்பு
    X
    உயிரிழப்பு

    குத்தாலம் அருகே ஆற்றில் மூழ்கி மாணவி பலி

    குத்தாலம் அருகே ஆற்றில் மூழ்கி மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ரூபேஷ். இவரது மகள் சோனாலி என்கிற ரூபா(வயது 12). இவர் ஸ்ரீகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று ரூபா தனது தோழிகளுடன் நட்டாற்றுக்கு குளிக்க சென்றார்.

    அப்போது ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்ற ரூபா, தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார். இதை கண்டு அவரது தோழிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டனர். இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ரூபாவை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.

    பின்னர் அந்த பகுதியை சேர்ந்தவர்கள், ஆற்றில் இறங்கி ரூபாவை தேடி உள்ளனர். அப்போது ரூபாவின் உடல் சிறிதுதூரம் தள்ளி கரை ஒதுங்கியது. உடனே அவரை மீட்ட அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நக்கம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ரூபா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×