என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நார்த்தாமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்- தொழிலாளி உள்பட 2 பேர் பலி
Byமாலை மலர்3 Oct 2019 5:08 PM GMT (Updated: 3 Oct 2019 5:08 PM GMT)
நார்த்தாமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தொழிலாளி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
அன்னவாசல்:
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள நார்த்தாமலையை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 40). தொழிலாளி. இவரது நண்பர் துவரவயலை சேர்ந்த பழனிச்சாமி (35). இவர்கள் இருவரும் பொம்மாடிமலையில் இருந்து நார்த்தாமலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். நார்த்தாமலை கூட்டுறவு வங்கி அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சின்னத்தம்பி, பழனிச்சாமி ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் அந்த வழியாக நடந்து சென்ற ஜன்னத்பேகம் என்ற பெண் மீதும் கார் மோதியதில் அவரும் படுகாயமடைந்தார்.
இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் ஜன்னத்பேகத்தை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சின்னத்தம்பி, பழனிச்சாமி ஆகிய 2 பேரின் உடலைகளை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு கார் டிரைவர் கீழக்குறிச்சியை சேர்ந்த செல்லத்துரை மகன் முருகேசனை (32) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X