என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு மருத்துவ முகாம்
Byமாலை மலர்2 Oct 2019 5:06 PM GMT (Updated: 2 Oct 2019 5:06 PM GMT)
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பாக, சிறப்பு மருத்துவ முகாம் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
அரியலூர்:
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பாக, சிறப்பு மருத்துவ முகாம் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இந்த மருத்துவ முகாமினை கலெக்டர் டி.ஜி.வினய் தொடங்கி வைத்து பார்வையிட்டார். முகாமில், 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய் தொடர்பாக பரிசோதனை மேற்கொண்டனர்.
இதில் 34 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். மேலும், முகாமில் பரிசோதனை மேற்கொண்ட 6 பெண்களுக்கு கர்ப்பபை வாய் பரிசோதனைக்காகவும், கண் பரிசோதனை மேற்கொண்ட 114 பேரில், 13 பேருக்கு கண்புரை நோய் கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
முகாமில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஹேமசந்த்காந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) முருகன், வட்டார மருத்துவ அலுவலர்கள், டாக்டர்கள் அனிதா, உமாமகேஷ்வரி, கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) முத்துகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X