search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இர்பானின் தந்தையை கைது செய்து அழைத்துச் சென்ற போலீசார்
    X
    இர்பானின் தந்தையை கைது செய்து அழைத்துச் சென்ற போலீசார்

    நீட் ஆள்மாறாட்ட புகாரில் சிக்கிய இர்பானின் தந்தை டாக்டர் அல்ல- விசாரணையில் புதிய திருப்பம்

    நீட் ஆள்மாறாட்ட புகாரில் சிக்கிய மாணவர் இர்பானின் தந்தை முகமது ஷபி டாக்டர் அல்ல என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
    வேலூர்:

    சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த மருத்துவ மாணவர் உதித்சூர்யா இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் மாணவனாக சேர்ந்த புகார் வெளிவந்ததை அடுத்து உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஆகியோரை சிபிசிஐடி தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களைத் தொடர்ந்து மேலும் சிலர் சிக்கி உள்ளனர்.

    இதில், வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த முகமது இர்பான் என்ற மாணவரும் ஒருவர். அவரை மருத்துவம் படிக்க வைக்க நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக கூறி அவரது தந்தை டாக்டர் முகமது ஷபியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பின்னர், மொரீசியஸ் நாட்டுக்கு சென்றுவிட்டதாக கூறப்பட்ட இர்பான் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    மாணவர் இர்பான்

    அவரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். விரைவில் சேலம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து அவரை காவலில் எடுத்து தேனி சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதான இர்பானின் தந்தை முகமது சபி டாக்டர் அல்ல என சி.பி.சி.ஐ.டி நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவர் மருத்துவ படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு மருத்துவ தொழில் செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
    Next Story
    ×