என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விடிய விடிய பலத்த மழை: ஊட்டி-மஞ்சூர் சாலையில் மண்சரிவு
Byமாலை மலர்30 Sep 2019 2:20 PM GMT (Updated: 30 Sep 2019 2:20 PM GMT)
மஞ்சூர் அருகே விடிய விடிய பெய்த மழையால் குந்தா பாலம் என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காலை மற்றும் மாலை நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அவ்வப்போது பலத்த மழையாகவும் பெய்கிறது.
ஊட்டியில் நேற்று காலை வெயில் நிலவியது. இந்த நிலையில் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து லேசான மழை பெய்ய தொடங்கியது. நள்ளிரவில் பலத்த மழையாக பெய்தது. இந்த மழை இன்று காலையும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் கடுங்குளிர் நிலவி வருகிறது. பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாமல் குளிரில் நடுங்கி கொண்டுள்ளனர். ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் தீ முட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். இதனால் வாகனங்களில் செல்பவர்களுக்கு தங்கள் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதன் காரணமாக முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே செல்கின்றனர்.
கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கோடநாடு, சோலூர் மட்டம், கூக்கல்தொரை உள்பட பல பகுதிகளில் நேற்று இரவு- 10 மணி முதல் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து இன்று காலையும் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை வீட்டு வெளியில் வரமுடியாமல் உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். தொடர் மழை பெய்வதால் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
மஞ்சூரில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய, விடிய பெய்தது. மழையால் சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்தோடியதுடன் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. மேலும் மழையுடன் பலத்த இடி, மின்னலும் ஏற்பட்டதால் அடிக்கடி மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
மேலும் அதிகாலை 3 மணியளவில் மஞ்சூர் அருகே குந்தா பாலம் என்ற இடத்தில் சாலையோர மண் திட்டு இடிந்து ரோட்டில் விழுந்தது. இதனால் மஞ்சூரில் இருந்து ஊட்டி, குன்னூர் பகுதிகளுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருபுறங்களிலும் இருந்து சென்ற அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன.
தகவல் அறிந்த நெடுஞ்சாலைதுறை கோட்ட உதவி பொறியாளர் பாலச்சந்தர் தலைமையிலான சாலை ஆய்வாளர் நஞ்சுண்டன் மற்றும் சாலை பணியாளர்கள் விரைந்து சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மஞ்சூர் பகுதியில் இருந்து ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு மண்சரிவுகள் முற்றிலுமாக அகற்றப்பட்டது. இதை தொடர்ந்து வாகனங்கள் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் மஞ்சூர் ஊட்டி சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பபட்டது.
நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியில் நேற்று ஒரே நாளில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:
ஊட்டி&20, கல்லட்டி&4, கிளைன்மெர்கன்&6, நடுவட்டம்&2 அவலாஞ்சி&83, எம்ரால்டு&64, கெத்தை&36, கிண்ணக்கொரை&17, அப்பர் பவானி&10, குன்னூர்&31, பர்லியா&16, கேத்தி&51, கோத்தகிரி&38, கோடநாடு&35, கூடலூர்&3, தேவாலா&3-.
இதேபோல் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழையாக பெய்து வருகிறது.
இதனால் வெப்பம் குறைந்து இதமான குளிர் நிலவி வருகிறது. இதேபோல் பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர் மலையாண்டிபட்டிணம் பகுதிகளிலும் நேற்று மாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காலை மற்றும் மாலை நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அவ்வப்போது பலத்த மழையாகவும் பெய்கிறது.
ஊட்டியில் நேற்று காலை வெயில் நிலவியது. இந்த நிலையில் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து லேசான மழை பெய்ய தொடங்கியது. நள்ளிரவில் பலத்த மழையாக பெய்தது. இந்த மழை இன்று காலையும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் கடுங்குளிர் நிலவி வருகிறது. பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாமல் குளிரில் நடுங்கி கொண்டுள்ளனர். ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் தீ முட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். இதனால் வாகனங்களில் செல்பவர்களுக்கு தங்கள் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதன் காரணமாக முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே செல்கின்றனர்.
கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கோடநாடு, சோலூர் மட்டம், கூக்கல்தொரை உள்பட பல பகுதிகளில் நேற்று இரவு- 10 மணி முதல் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து இன்று காலையும் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை வீட்டு வெளியில் வரமுடியாமல் உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். தொடர் மழை பெய்வதால் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
மஞ்சூரில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய, விடிய பெய்தது. மழையால் சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்தோடியதுடன் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. மேலும் மழையுடன் பலத்த இடி, மின்னலும் ஏற்பட்டதால் அடிக்கடி மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
மேலும் அதிகாலை 3 மணியளவில் மஞ்சூர் அருகே குந்தா பாலம் என்ற இடத்தில் சாலையோர மண் திட்டு இடிந்து ரோட்டில் விழுந்தது. இதனால் மஞ்சூரில் இருந்து ஊட்டி, குன்னூர் பகுதிகளுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருபுறங்களிலும் இருந்து சென்ற அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன.
தகவல் அறிந்த நெடுஞ்சாலைதுறை கோட்ட உதவி பொறியாளர் பாலச்சந்தர் தலைமையிலான சாலை ஆய்வாளர் நஞ்சுண்டன் மற்றும் சாலை பணியாளர்கள் விரைந்து சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மஞ்சூர் பகுதியில் இருந்து ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு மண்சரிவுகள் முற்றிலுமாக அகற்றப்பட்டது. இதை தொடர்ந்து வாகனங்கள் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் மஞ்சூர் ஊட்டி சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பபட்டது.
நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியில் நேற்று ஒரே நாளில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:
ஊட்டி&20, கல்லட்டி&4, கிளைன்மெர்கன்&6, நடுவட்டம்&2 அவலாஞ்சி&83, எம்ரால்டு&64, கெத்தை&36, கிண்ணக்கொரை&17, அப்பர் பவானி&10, குன்னூர்&31, பர்லியா&16, கேத்தி&51, கோத்தகிரி&38, கோடநாடு&35, கூடலூர்&3, தேவாலா&3-.
இதேபோல் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழையாக பெய்து வருகிறது.
இதனால் வெப்பம் குறைந்து இதமான குளிர் நிலவி வருகிறது. இதேபோல் பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர் மலையாண்டிபட்டிணம் பகுதிகளிலும் நேற்று மாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X