என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஈரோட்டில் மதுபாட்டில் விற்ற 15 பேர் கைது

    ஈரோடு அருகே மதுபாட்டில் விற்ற 15 பேரை கைது செய்த போலீசார் 85 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பவானி, பெருந்துறை, கோபி உட்பட்ட பகுதிகளில் போலீசார் சட்ட விரோத மது விற்பனையை தடுக்கும் வகையில் ரோந்து சென்றனர்.

    இதில், சென்னிமலை, பெருந்துறை, பவானிசாகர், வெள்ளித்திருப்பூர், பர்கூர், பவானி போன்ற எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக 10 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 85 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல், பவானிசாகர் ஏரங்காட்டூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அதேபகுதியை சேர்ந்த அரைக்காதன் என்ற பழனிச்சாமி(வயது 52) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×