search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.45 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்.
    X
    ரூ.45 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்.

    கூடலூரில் சாலையில் கிடந்த ரூ.45 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

    கூடலூரில் சாலையில் கிடந்த ரூ.45 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
    ஊட்டி:

    கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட செம்பாலா அட்டி பகுதியை சேர்ந்தவர் ஜாக்சன்(வயது 50). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று காலை 8 மணிக்கு வழக்கம் போல் பயணிகளை அழைத்து கொண்டு செம்பாலாவில் இருந்து கூடலூருக்கு ஆட்டோவை ஓட்டி வந்தார். அப்போது அட்டி செம்பாலா இடையே வந்த போது சாலையில் ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்தன. இதை கண்ட ஜாக்சன் உடனே ஆட்டோவை நிறுத்தினார்.

    பின்னர் சாலையில் சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்தார். அதில் ரூ.45 ஆயிரம் இருந்தது. பின்னர் தனது ஆட்டோவில் வந்த பயணிகளை கூடலூருக்கு ஜாக்சன் அழைத்து சென்று விட்டார். தொடர்ந்து ஜாக்சன் தனது சக ஆட்டோ டிரைவர்களான தமிழ், கண்ணதாசன், மொரி, சியாபு, ஜீவா ஆகியோருடன் கூடலூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், சிறப்பு தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சத்தி ஆகியோரை சந்தித்து விவரங்களை தெரிவித்தார். பின்னர் சாலையில் கிடந்த ரூ.45 ஆயிரத்தை சப்இன்ஸ்பெக்டர் பிரகாஷிடம் ஜாக்சன் ஒப்படைத்தார்.

    இதனிடையே செம்பாலா பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் சிகாமணி (49) என்பவர் கூடலூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் மோட்டார் சைக்கிளில் கூடலூருக்கு வரும் போது தான் வைத்திருந்த ரூ.45 ஆயிரம் கீழே விழுந்து காணாமல் போய் விட்டதாக போலீசாரிடம் தெரிவித்தார். அதில் உண்மை தன்மை இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் அந்த பணம் ஆட்டோ டிரைவர் ஜாக்சன் கையால் சிகாமணியிடம் ஒப்படைக்கப்பட்டது.
    Next Story
    ×