என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேதாரண்யத்தில் அம்பேத்கார் சிலை சேதம் - 11 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Byமாலை மலர்19 Sep 2019 10:24 AM GMT (Updated: 19 Sep 2019 10:24 AM GMT)
வேதாரண்யத்தில் அம்பேத்கார் சிலை சேதமடைந்த சம்பவம் குறித்து 11 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த மாதம் 25-ந் தேதி இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு ஜீப் தீவைத்து எரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வேதாரண்யம் பஸ் நிலையம் அருகே இருந்த அம்பேத்கார் சிலை சேதப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேதாரண்யம் பகுதியை சேர்ந்த சரவணன்(வயது 43), பாண்டியராஜன்(32), லெனின்(35), பாபுராஜ்(40), சரத்குமார்(27), தமிழ்ச்செல்வன்(26), அரவிந்த்ராஜ்(23), மணிகண்டன்(33), விஜயராகவன்(27), கணேஷ்குமார் (24), சாமிநாதன்(43) ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையிலும், திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது குற்ற வழக்குகள் இருந்து வருவதால் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், 11 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என கலெக்டர் சுரேஷ்குமாருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் சுரேஷ்குமார், சிறையில் உள்ள 11 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து 11 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து உத்தரவின் நகலை போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சுபாஷ் சந்திரபோஸ், புதுக்கோட்டை மற்றும் திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினார்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த மாதம் 25-ந் தேதி இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு ஜீப் தீவைத்து எரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வேதாரண்யம் பஸ் நிலையம் அருகே இருந்த அம்பேத்கார் சிலை சேதப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேதாரண்யம் பகுதியை சேர்ந்த சரவணன்(வயது 43), பாண்டியராஜன்(32), லெனின்(35), பாபுராஜ்(40), சரத்குமார்(27), தமிழ்ச்செல்வன்(26), அரவிந்த்ராஜ்(23), மணிகண்டன்(33), விஜயராகவன்(27), கணேஷ்குமார் (24), சாமிநாதன்(43) ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையிலும், திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது குற்ற வழக்குகள் இருந்து வருவதால் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், 11 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என கலெக்டர் சுரேஷ்குமாருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் சுரேஷ்குமார், சிறையில் உள்ள 11 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து 11 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து உத்தரவின் நகலை போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சுபாஷ் சந்திரபோஸ், புதுக்கோட்டை மற்றும் திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X