search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தண்ணீர் டேங்கர் லாரிகள்
    X
    தண்ணீர் டேங்கர் லாரிகள்

    தண்ணீர் டேங்கர் லாரி டிரைவர்களுக்கு விழிப்புணர்வு

    தண்ணீர் டேங்கர் லாரி டிரைவர்களுக்கு விபத்துக்களை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் செங்குன்றத்தை அடுத்த ஆலமரம் பகுதியில் நடைபெற்றது.
    செங்குன்றம்:

    தமிழ்நாடு தனியார் தண்ணீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக தண்ணீர் டேங்கர் லாரி டிரைவர்களுக்கு விபத்துக்களை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் செங்குன்றத்தை அடுத்த ஆலமரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தமிழ்நாடு தனியார் தண்ணீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நிஜலிங்கம் தலைமை தாங்கினார். லாரி டிரைவர்கள் வாகனங்கள் ஓட்டும்போது செல்போன் பேசிக்கொண்டு ஓட்டக்கூடாது, குடித்துவிட்டு ஓட்டக்கூடாது, சாலை விதி முறைகளை மீறக்கூடாது என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×