என் மலர்
செய்திகள்

மாணவர்களை வெளியே நிற்க வைத்தால் நடவடிக்கை- அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை
அந்தியூர்:
அந்தியூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
இதில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், ஆகியோர் கலந்து கொண்டு 1376 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 15 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
அப்போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் இன்று கல்வி துறை உள்பட ஒவ்வொரு துறையிலும் பல்வேறு வியக்கத்தகு பணிகள் நடந்து இந்தியாவே வியக்கும் வகையில் நடந்து வருகிறது.
மக்கள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி ஏரிகள், குளங்கள் தூர்வாரும் பணி நடந்து வருகிறது.
மேட்டூர் வாய்க்காலில் இருந்து உபரி நீர் வருகிற போது அங்குள்ள ஏரி குளங்களில் அந்த நீரை நிரப்புவதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது நடந்து வருகிறது.
மேலும் ஆற்றங்கரையோரங்களில் தடுப்பணைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. மழை நீரை சேகரிக்கும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் பள்ளிக்கு கட்டணம் செலுத்தவில்லை என அந்த மாணவியை வெளியே நிறுத்தி வைத்ததாக என் கவனத்துக்கு வந்தது.
உடனடியாக வெளியேற்றப்பட்ட மாணவியை கட்டணம் இல்லாமல் சேர்க்கப்பட்டு உள்ளது. அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தின் அடிப்படையில் அந்த மாணவி மீண்டும் சேர்க்கப்பட்டு உள்ளார்.
இது போன்ற ஏதேனும் என் கவனத்துக்கு வருமேயானால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இப்படி ஒரு தடவைக்கு இருதடவை மூன்று குறை வருமேயானால் கடும் நடவடிக்கை அரசு சார்பில் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.






