search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மனநிலை குன்றிய மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது

    ஜெயங்கொண்டம் அருகே மனநிலை குன்றிய மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குழவடையான் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர்-மாரியம்மாள் தம்பதியின் இரண்டாவது மகள் பிரியா (வயது 16, பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிறவியிலேயே மாற்றுத்திறனாளியாக பிறந்தவர். மேலும் சிறிது மன வளர்ச்சி குன்றியவர். சிறுமிக்கு சிறுவயது முதலே அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டுவது வழக்கம்.

    இந்நிலையில் சிறுமி கடந்த 14-ந்தேதி, தனக்கு வயிற்று வலி உள்ளதாக தனது தாயார் மாரியம்மாளிடம் கூறியுள்ளார். இதையடுத்து மாரியம்மாள் சிறுமியை சோதித்தபோது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    மகள் கர்ப்பிணியாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். தனது மகளிடம் விசாரித்தபோது, கடந்த போகிப் பண்டிகை அன்று தனது மாமனார் இறந்த ஈமச் சடங்கு நடந்த அன்று இரவு சிறுமி தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அதே கிராமம் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த முனுசாமி மகன் கார்த்தி என்பவர் பின் தொடர்ந்து வந்து, சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதுகுறித்து மாரியம்மாள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரகலா வழக்குப்பதிவு செய்து, விசாரித்து கார்த்தியை (27) கைது செய்தார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி பிரியா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    Next Story
    ×