என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சென்னிமலை அருகே நார் தொழிற்சாலையில் தீ
சென்னிமலை:
சென்னிமலை அருகே துலுக்கம்பாளையத்தை சேர்ந்தவர்கள் கார்த்தி, (29) ஹரீஸ், (25) சதீஸ், (41) மற்றும் பிரகாஷ (25) உறவினர்களான இந்த நால்வரும் துலுக்கம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தேங்காய் மட்டையில் இருந்து நார் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து நடத்தி வருகிறார்கள்.
இங்கு தேங்காய் மட்டையில் இருந்து நவீன முறையில் நாராக மாற்றி அதை உயரவைத்து இயந்திரங்கள் மூலம் நார் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
இந்த மில்லில் 10- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் தொழிற்சாலைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில், மதியம் பகல் 2 மணியளவில் தொழிற்சாலையின் உள் பகுதியில் இருந்து கரும்புகை வெளி வந்துள்ளது.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அதன் உரிமையாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து சென்று பார்த்த போது தொழிற்சாலைக்குள் இருந்த தேங்காய் நார்களில் தீ கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. பின்னர் உடனடியாக நார்களை உலர்த்தும் இயந்திரங்களில் பொருத்தப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்களை அப்புறப்படுத்தினார்கள்.
பின்னர் சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அதிகாரி மணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
ஆனால் காற்று பலமாக வீசியதால் தொழிற்சாலைக்கு வெளியே குவித்து வைக்கப்பட்டிருந்த தேங்காய் மட்டைகளிலும் தீ பரவியது. அப்போது தொழிற்சாலை அருகிலேயே அடுக்கி வைக்கப்பட்டிருந்த நார்களில் தீ பிடிக்காமல் இருக்க அப்பகுதியை சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் பச்சை வேப்பிலைகளை ஒடித்து தீயை தட்டி தீ பரவாமல் தடுத்தனர். அப்போதும் தீ பரவியதால் பெருந்துறை தீயணைப்பு நிலையத்தில் இருந்தும் தீயணைப்பு வண்டி வரவழைக்கப்பட்டு தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
ஆனால் தீயணைப்பு வண்டிகளில் இருந்த தண்ணீர் தீர்ந்து போனதால் உடனடியாக சென்னிமலை, பெருந்துறை பகுதியில் இருந்து 10-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு சுமார் மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் தேங்காய் நாரை உலர வைக்கும் இயந்திரம், தேங்காய் மட்டைகளை அள்ளி போடும் இயந்திரம், பார்சல் போடும் இயந்திரம் மற்றும் தேங்காய் நார், தேங்காய் மட்டைகள் என ஏராளமான பொருட்கள் தீயில் எரிந்து நாசம் ஆனது.
இதன் மதிப்பு ரூ. 50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்