என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மின்னல் தாக்கி தொழிலாளி பலி
Byமாலை மலர்31 Aug 2019 6:15 PM GMT (Updated: 31 Aug 2019 6:15 PM GMT)
ஆலங்குடி அருகே மின்னல் தாக்கியதில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே மாஞ்சக்குளத்தில் குடிமராமத்து திட்டத்தில் கண்மாயில் நேற்று முன் தினம் வேலை நடைபெற்று கொண்டிருந்தது. அதில் மேல முத்துக்காடு சின்னையா மகன் சுப்பிரமணியன் (வயது 37) என்பவர் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுப்பிரமணியன் மழைக்காக அருகில் உள்ள புளியமரத்தில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுப்பிரமணியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X