search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழிலாளி பலி
    X
    தொழிலாளி பலி

    மின்னல் தாக்கி தொழிலாளி பலி

    ஆலங்குடி அருகே மின்னல் தாக்கியதில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே மாஞ்சக்குளத்தில் குடிமராமத்து திட்டத்தில் கண்மாயில் நேற்று முன் தினம் வேலை நடைபெற்று கொண்டிருந்தது. அதில் மேல முத்துக்காடு சின்னையா மகன் சுப்பிரமணியன் (வயது 37) என்பவர் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுப்பிரமணியன் மழைக்காக அருகில் உள்ள புளியமரத்தில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுப்பிரமணியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×