என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆரணி புதிய மாவட்டம் ஆக்கப்படும்- அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தகவல்
ஆரணி:
ஆரணியில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்வு கூட்டம் இன்று நடந்தது. அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனு வாங்கினார். நிகழச்சியில் அவர் பேசியதாவது:-
ஆரணியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் அமைக்க வேண்டும் என 50 ஆண்டுகால கோரிக்கை மக்களிடையே எழுந்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் பெரிய மாவட்டமாக உள்ளது. மாவட்டத்தின் மைய பகுதியில் ஆரணி உள்ளது. வந்தவாசி, ஆரணி, போளூர், செய்யாறு, ஜமுனாமரத்தூர், வெம்பாக்கம் ஆகிய 6 தாலுகாக்களை கொண்டு ஆரணி தலைமையில் புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமாரிடம் கோப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
அது விரைவில் முதல்வர் ஒப்புதலுடன் நிறைவேற்றப்படும். விரைவில் ஆரணி புதிய மாவட்டமாக உருவாகும். இதற்கான முயற்சிகள் வேகமாக நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்