என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விநாயகர் சதூர்த்தி விழா ஏற்பாடுகள் முன் எச்சரிக்கையாக 152 பேர் கைது
Byமாலை மலர்29 Aug 2019 10:36 AM GMT (Updated: 29 Aug 2019 10:36 AM GMT)
ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழைய குற்றவாளிகள் 152 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 2-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.ஈரோடு மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. இந்து அமைப்புகள் சார்பில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி அமைதியான முறையில் நடத்திட மாவட்ட போலீஸ் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த 5 நாட்களாக போலீசார் இரவு பகல் என்று பாராமல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பழைய குற்றவாளிகளின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். முன்னெச்சரிக்கையாக பழைய குற்றவாளிகள் 152 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கூறியதாவது:-
விநாயகர் சதுர்த்தியின் போது மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 5 நாட்களாக நடத்தப்பட்ட வாகன சோதனையில் மொத்தம் 5 ஆயிரத்து 492 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. 2,674 பேர் மீது வழக்கு செய்யபட்டுள்ளது.
152 பழைய குற்றவாளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்தி அன்று அமைதியை சீர்குலைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 2-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.ஈரோடு மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. இந்து அமைப்புகள் சார்பில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி அமைதியான முறையில் நடத்திட மாவட்ட போலீஸ் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த 5 நாட்களாக போலீசார் இரவு பகல் என்று பாராமல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பழைய குற்றவாளிகளின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். முன்னெச்சரிக்கையாக பழைய குற்றவாளிகள் 152 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கூறியதாவது:-
விநாயகர் சதுர்த்தியின் போது மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 5 நாட்களாக நடத்தப்பட்ட வாகன சோதனையில் மொத்தம் 5 ஆயிரத்து 492 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. 2,674 பேர் மீது வழக்கு செய்யபட்டுள்ளது.
152 பழைய குற்றவாளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்தி அன்று அமைதியை சீர்குலைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X