search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாடகை செலுத்தாத 5 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்த காட்சி
    X
    வாடகை செலுத்தாத 5 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்த காட்சி

    நகராட்சிக்கு முறையாக வாடகை செலுத்தாத 5 கடைகளுக்கு ‘சீல்’

    நகராட்சிக்கு முறையாக வாடகை செலுத்தாத 5 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் பெரும்பாலான கடைகள் நகராட்சிக்கு முறையாக மாத வாடகை செலுத்தவில்லை எனக்கூறப்படுகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், வருவாய் அலுவலர் காந்தி தலைமையில், வருவாய் ஆய்வாளர்கள் சீனிவாசன், நைனாமுகமது, உதவி ஆய்வாளர்கள் கணேசன், திருமலைக்குமார், பாண்டியன் உள்ளிட்டோர் நகராட்சி பகுதிகளில் வாடகை வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கோட்டை சந்தைப்பேட்டை பகுதியில் நகராட்சிக்கு முறையாக வாடகை செலுத்தாத 5 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், நகராட்சிக்கு முறையாக வாடகை செலுத்தாத அனைத்து கடைகளும் பூட்டி சீல் வைக்கப் படும் என தெரிவித்தனர்.
    Next Story
    ×