என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காரைக்குடியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
காரைக்குடி:
காரைக்குடி அழகப்பாபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி ஆசிகாபர்வீன் (வயது 20). இருவரும் கடந்த 1 மாதத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நேற்று ஆனந்துக்கு பிறந்தநாள்.
எனவே சாமியார் தோட்டத்தில் உள்ள அவரது சொந்த வீட்டுக்கு கணவனும், மனைவியும் சென்றனர். அப்போது ஆனந்த் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதனால் ஆசிகாபர்வீன் அவரை கண்டித்தார். இதைத் தொடர்ந்து கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் மனவேதனை அடைந்த ஆசிகாபர்வீன் ஆலங்குடியார் வீதியில் உள்ள வீட்டுக்கு வந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து காரைக்குடி தெற்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ஆசிகாபர்வீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காரைக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அருண் உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
ஆசிகாபர்வீனுக்கு திருமணமாகி 1 மாதமே ஆவதால் அவருடைய சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்