search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வேதாரண்யத்தில் கடையில் பணம் திருடிய வாலிபர் கைது

    வேதாரண்யத்தில் காய்கறி கடையில் பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் வீரசெல்வம் என்பவர் காய்கறிகடை நடத்தி வருகிறார்.

    இவர் மும்முரமாக வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது அங்கு நின்றிருந்த ஒரு வாலிபர் கல்லாபெட்டியில் இருந்து ரூ.500-ஐ திருடியுள்ளார். இதனை கவனித்துவிட்ட வீரசெல்வம் பணம் திருடிய வாலிபரை பிடித்து வேதாரண்யம் போலீசில் ஒப்படைத்தார்.

    விசாரணையில் அந்த வாலிபர் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த ரெங்கசாமி மகன் வெங்கடேசன் (வயது 34) என்று தெரியவந்தது. அவரை சப்-இன்ஸ்பெக்டர் அங்கப்பன் கைது செய்தார்.

    Next Story
    ×